தமிழ்நாடு

ரயில் மீது ஏறி முதியவர் தற்கொலை முயற்சி: அரக்கோணத்தில் பரபரப்பு!

DIN

அரக்கோணத்தில் நள்ளிரவில் ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் சாதுரியமாகக் காப்பாற்றினர். 

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோ (69) வயது முதியவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் நடை மேடை 7-ல் நின்ற மின்சார ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புக் காவலர்கள் உடனடியாக நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு ரயில்வே ஊழியர்களை வரவழைத்து சாதுரியமாக செயல்பட்டு முதியவரை பத்திரமாக மீட்டுள்ளனர். எனினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், தற்கொலை முயற்சி குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT