கோப்புப்படம் 
தமிழ்நாடு

'அபத்தமான குற்றச்சாட்டு'- ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனைக்கு காங்கிரஸ் கண்டனம்

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்திற்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

DIN

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்திற்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இதுகுறித்து ட்விட்டரில், 'ப.சிதம்பரம் ஒரு தேசியவாதி மற்றும் ஒரு தேசபக்தர். நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு சந்தேகத்திற்கு இடமில்லாதது. தன்னை இழிவுபடுத்த சிபிஐ கதை கட்டுகிறதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சருக்கு எதிராக சிபிஐ மூலம் ஆதார அடிப்படையிலான அபத்தமான குற்றச்சாட்டுகளை விதைப்பது, தேர்ந்த அரசியல்வாதிகளின் நடத்தையில் உள்ள வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்திற்குச் சொந்தமான தில்லி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை இன்று நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT