தமிழ்நாடு

துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விடியோ

DIN

திருச்சி: துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல். இவர், பச்சைமலை பகுதி வண்ணாடு ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்ட தேர்வான பயனாளிகளிடம் ரூ. 3000 வீதம் ஐந்து பயனாளிகளிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெறும் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர் பயனாளியிடம் நான் இடத்தை பார்வையிட வரும்பொழுது மீதி பணத்தை தர வேண்டும் என்று கறாராக கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

இந்த விடியோ காட்சிகளை கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT