முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் தமிழிசை

தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
கோப்புப் படம்.
பகிர்:

தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள் (ESIC) அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது ஓர் மருத்துவராக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு மருத்துவமனையும் சுமார் 5 ஏக்கரில் 155 கோடியில் அதி நவீன வசதிகளுடன் 100 படுக்கைகளுடன் அமைய உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற   தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களுக்கு அருகாமையிலேயே அதி நவீன வசதிகளுடன்  தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. தொழிற்சாலைகளில் ஏற்படும் எதிர்பாரா விபத்து நேரத்தில் அவசரகால சிகிச்சைக்கு தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

தமிழகத்திற்கு 8 தொழிலாளர்கள் நல மருத்துவமனைகள் (ESIC) அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும், மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவிற்கும் எனது வாழ்த்துக்களும்.. நன்றிகளும்..என்று தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →