அதிமுக எதிர்க்கட்சியாக எந்தவகையிலும் செயல்படவில்லை என்று வி.கே. சசிகலா புதன்கிழமை விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற சசிகலா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“அதிமுகவில் என்னை இணைக்க முடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்? ஒரு இயக்கம், கட்சியின் தலைவர் தொண்டர்களால்தான் தேர்வு செய்யப்படுவார்கள். நான் அதிமுகவில் இணைவது தொண்டர்கள் கையில் தான் உள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு
தற்போது அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் என்னை எதிர்க்கவில்லை. பதவிக்கு ஆசைப்படும் சிலர் எதிர்க்கின்றனர். அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று வெளிப்படையாக கூற முடியாது. விரைவில் எனது தலைமையில் கட்சி இயங்கும் என 100 சதவிகிதம் நம்பிக்கை உள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக எந்தவகையிலும் செயல்படவில்லை” எனத் தெரிவித்தார்.