முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்துக் குறைந்தது: நீர்மட்டம் 118.09 அடியாக உயர்வு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தணிந்து வருவதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  8,464 கன அடியாகக் குறைந்தது.

Updated On : 26 மே, 2022 at 8:36 AM
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,464 கன அடியாகக் குறைந்தது.
பகிர்:

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தணிந்து வருவதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,464 கன அடியாகக் குறைந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக அதிகரித்தது. 

அணைக்கு வினாடிக்கு 10,508 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் வரத்தும் இருப்பும் திருப்திகரமாக இருந்ததால் டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாற்றங்கால் விடுவதற்கு ஏதுவாக செவ்வாய்க்கிழமை காலை டெல்டா பாசனத்திற்கு தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார்.

Advertisement

தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு பத்தாயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 

இந்நிலையில், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்து வருவதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,539 கன அடியிலிருந்து, 8,464 கன அடியாக  குறைந்துள்ளது .

நீர்வரத்து குறைந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 117.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 118.09 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 90.45 டி.எம்.சி ஆக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மழை அளவு: 3.60 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.