ஐஎன்எஸ் அடையாறு ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கிய பிரதமருக்கு முதல்வர்நினைவு பரிசாக புத்தகம் வழங்கியபோது 
தமிழ்நாடு

பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்

ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

DIN

ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைக்க இன்று(வியாழக்கிழமை) சென்னை வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், மத்திய இணையமைச்சர் எல். முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். 

சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

இதையடுத்து பிரதமர் மோடி அங்கிருந்து சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 5.45 மணியளவில் வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 5 புதிய திட்டங்களை தொடக்கிவைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT