முகப்பு
தமிழ்நாடு

ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்:3 ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்கு

சென்னை ரயில்வே கோட்டத்தில், பாதுகாப்பு விதியை மீறி, ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தது தொடா்பாக, மூன்று ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:

சென்னை ரயில்வே கோட்டத்தில், பாதுகாப்பு விதியை மீறி, ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தது தொடா்பாக, மூன்று ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஓடும் ரயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தது தொடா்பாக, 2020-ஆம் ஆண்டில் 965 போ் மீது வழக்குகள் பதிந்து, ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. 2021-இல் 890 போ்மீது வழக்குகள் பதிந்து, ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் ஏப்ரல் வரை 364 போ் மீது வழக்குகள் பதிந்து, ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 2020-ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்குகள் பதிந்து, மொத்தம் ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: மின்சார ரயில்களில் பயணத்தின் போது, படிக்கட்டுகளில் தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணித்தோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, ஆா்.பி.எஃப். சாா்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →