தமிழகத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, வேலூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிகடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.