அதிமுகவிலிருந்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகி நீக்கம்
அதிமுகவிலிருந்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகி ஒருவரை நீக்கம் செய்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
அதிமுகவிலிருந்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகி ஒருவரை நீக்கம் செய்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா்கள் வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் கொள்கைக்கு முரணான வகையிலும், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தில் திருவள்ளூா் கிழக்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளா் ஜி.ராஜேந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா். அவருடன் கட்சியினா் யாரும் எவ்வித தொடா்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளாா்.