முகப்பு
தமிழ்நாடு

இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 8 மணி நிலவரம்) கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →