முகப்பு
தமிழ்நாடு

விதிமீறல் கட்டடம்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

விதிமீறல் கட்டடம் மீது ஏன் நடவடிக்கைவில்லை என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 5 நவம்பர் 2022, 6:52 pm IST
பகிர்:

விதிமீறல் கட்டடம் மீது ஏன் நடவடிக்கைவில்லை என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விதிமீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிரான வழக்கில், ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் எனவும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  

மனுதாரரை மிரட்டும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாகவும், கட்டடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரி யார் என்றும், காவல்துறை அதிகாரிகள் யார் என்றும் அறிக்கை தரவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

விவரங்களை சேகரித்து நவம்பர் 7 ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.