தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது: கே.எஸ்.அழகிரி கண்டனம்

DIN

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.மணிகண்டனை, பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத போது காவல்துறை அவரை ஏன் கைது செய்தது என்று தெரியவில்லை. இத்தகைய கைது நடவடிக்கைகள் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும். 

இந்த கைது நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டது மிகுந்த வியப்பையும், வேதனையையும் தருகிறது. எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்பட்டுள்ள திரு. மணிகண்டன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT