ஈரோடு சிவகிரி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலி
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலியானார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலியானார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் லேத் பட்டறை நடத்தி வரும் சதீஷ் (40), சிவகிரி அருகே சிலுவம்பாளையத்தில் மனைவி அபிநயா சதீஷ், மகன், மகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்றிரவு மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் காரில் வீடு திரும்பும்போது சிலுவம்பாளையம் என்ற இடத்தில் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வெளியேற முடியாத சதீஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
காலையில் அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.