அரக்கோணத்திலிருந்து கேரளம் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை
முன்னெச்சரிக்கை பணிகளுக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கேரள மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.
முன்னெச்சரிக்கை பணிகளுக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கேரள மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளது.
இதையும் படிக்க.. காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!
அரக்கோணம் 04 வது படை பிரிவில் இருந்து 30 பேர் கொண்ட 2 குழுக்கள் கேரள மாநில அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் படைப் பிரிவின் கமாண்டன்ட் அருண் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் முதலுதவி சிகிச்சை பாதுகாப்பு உபகரணங்கள், அதிநவீன தொலைத் தொடர்பு உபகரணங்கள் மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் கேரள மாநிலம் சபரிமலை பகுதிக்குச் சென்றனர்.