தமிழ்நாடு

வனப்பகுதிகளுக்குள் விடுதிகள்: உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறது?

DIN

வனப்பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக விடுதிகள் அமைக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்று உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத விடுதிகள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேகமலையில் சட்டவிரோத விடுதிகளை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட கட்டுமானத்தின் ஆவனங்களை ஆய்வு செய்து விடுதியா அல்லது தொழிலாளர் குடியிருப்பா என ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதியா அல்லது தொழிலாளர் குடியிருப்பா என ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையரை உயர் நீதிமன்றக் கிளை நியமித்துள்ளது. தேனி வனத்துறை அலுவலருடன் இணைந்து வழக்குரைஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கு தொடர்பாக தேனி ஆட்சியர், மாவட்ட வனத்துறை அலுவலர் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கரிடம் பேட்டி கண்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது?

75 வயதில் பாஜக மூத்த தலைவர்களுக்கு ஓய்வு: அப்போ மோடிக்கு? ரேவந்த் ரெட்டி பேச்சு

‘தீராக் காதல்’ ஷிவதா...!

ரிசர்வ் வங்கி: புதிய செயல் இயக்குநர் நியமனம்!

கேஜரிவால் இன்று மாலை பிரசாரம் தொடங்குகிறார்!

SCROLL FOR NEXT