தமிழ்நாடு

ஒரே பயணச்சீட்டு: முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது

சென்னையில் ஒரே பயணச்சீட்டில் பேருந்து, ரயில்களின் பயணம் செய்யும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

DIN

சென்னையில் ஒரே பயணச்சீட்டில் பேருந்து, ரயில்களின் பயணம் செய்யும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து பணிக்கு வந்து செல்வோருக்கு ஏதுவாக மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களின் ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்யும் வசதியை ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், ஒரே பயணச்சீட்டு திட்டம் குறித்து பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநகரப் போக்குவரத்து கழகம், மெட்ரோ நிர்வாகம் மற்றும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தை இணைத்து கடந்த 2010ஆம் ஆண்டு பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் கூட்டம் முதல்முறையாக கூடியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

SCROLL FOR NEXT