தமிழ்நாடு

ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணம்! அரசு செலவில் 200 பேரை அழைத்துச் செல்ல முடிவு

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு 200 பேரை அழைத்துச் செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

DIN

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு 200 பேரை அழைத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

தமிழகத்தில் மூத்த குடிமக்கள், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், முதற்கட்டமாக 200 பேரை அழைத்துச் செல்வதற்கான சுற்றறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் இன்று வெளியிட்டுள்ளார். 

இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 பேர் என மொத்தம் 200 பேரை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக 20 மண்டலங்களில் தலா 10 பேரை தேர்வு செய்து ஆணையர்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

காசிக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் 60-70 வயதுடையவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள்ளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT