தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

DIN

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை யொட்டி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்நிலையில் மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது, மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது. 

இதையொட்டி நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோர்டான், ஓமன், எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!

2வது டி20: தென்னாப்பிரிக்க வீரர்கள் சிக்ஸர் மழை! இந்திய அணிக்கு 214 ரன்கள் இலக்கு!

கோலி, ரோஹித் தரமிறக்கமா? சம்பளத்தில் ரூ. 2 கோடி குறையும் வாய்ப்பு!

மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் வெள்ளி!

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

SCROLL FOR NEXT