தமிழ்நாடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: தலைமைச்செயலர் ஆலோசனை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச்செயலர் வெ.இறையன்பு இன்று ஆலோசித்தார்.

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச்செயலர் வெ.இறையன்பு இன்று ஆலோசித்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. தொடர்ந்து விழவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலர் வெ.இறையன்பு தலைமையில் இன்று நடைபெற்றது.

அரசுத்துறைச்செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர். 

அப்போது திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT