தமிழ்நாடு

சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயிலுக்கு அதிக வரவேற்பு

DIN

 சென்னை - மைசூரு செல்லும் வந்தே பாரத் பயணிகள் ரயிலுக்கு முதல் 10 நாளில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே நவ.12-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. வாரத்தின் 6 நாள்கள் இயக்கப்படும் (புதன்கிழமை தவிர) இந்த ரயில், பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நவ.12 முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மைசூரு (வண்டி எண்.20607) சென்ற ரயிலில் சொகுசு வகுப்பு சராசரியாக 147 சதவீதமும், குளிரூட்டப்பட்ட இருக்கை வகுப்பு சராசரியாக 115 சதவீதமும் நிரம்பின.

இதேபோல், நவ.12 முதல் 22-ஆம் தேதி வரை மைசூரில் இருந்து சென்னை (வண்டி எண்.20608) சென்ற ரயிலில் சொகுசு வகுப்புகளில் சராசரியாக 125 சதவீதமும், குளிரூட்டப்பட்ட இருக்கை வகுப்புகளில் சராசரியாக 97 சதவீதமும் நிரம்பின.

இந்த ரயில் வேலூா் மாவட்டம், காட்பாடி, பெங்களூரில் நின்று செல்கிறது. இடை நிறுத்தங்களில் இறங்கி ஏறும் பயணிகளின் அடிப்படையிலும், பயணம் செய்த மொத்த பயணிகள், இருக்கை வசதி அடிப்படையிலும் சதவீதம் கணக்கீடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT