முடிவே இல்லையா, இந்த விளையாட்டுக்கு?
ஆற்காடு அடுத்த லப்பைப்பேட்டையில் மின்கம்பங்களை அகற்றாமல் கட்டப்பட்டுள்ள கால்வாயை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துளள்னர்.
ஆற்காடு அடுத்த லப்பைப்பேட்டையில் மின்கம்பங்களை அகற்றாமல் கட்டப்பட்டுள்ள கால்வாயை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துளள்னர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லப்பைப்பேட்டை கிராமத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கி நடைபெற்றன.
கால்வாய் அமைக்கும் பாதையில் இருந்த இரு மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதனால் கால்வாய்களுக்கு நடுவே மின்கம்பம் உள்ளதால், கழிவுநீர் செல்லும்போது அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, கால்வாய்க்கு நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.