குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள் தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த 19-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயமடைந்த நிலையில், இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
வெல்டிங் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.