தமிழ்நாடு

ரூபி மனோகரனின் இடைநீக்க உத்தரவுக்கு தடை! - காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

DIN

காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏ ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கி காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கொண்ட நடவடிக்கைக்கு கட்சித் தலைமை தடை விதித்துள்ளது. 

கடந்த நவ. 15 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகத் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி நேற்று அறிவித்தார். 

இந்நிலையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை முறையற்றதாக இல்லை என்பதாலும் இயற்கை நீதியின் கொள்கைக்கு முரணாக இருப்பதாலும் ரூபி மனோகரனின் நீக்கத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மேலும், தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்  செயல்பாடு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் காந்தி மீது நாடு முழுவதும் நம்பிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவா்

‘பல்லடத்தில் 5 கோயில்களின் திருப்பணிகள் துரிதப்படுத்தப்படும்’

பணி நிறைவுச் சான்று: வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் மனு

திருப்பூரில் ஒரே மாதத்தில் சேதமடைந்த தாா் சாலை: பொதுமக்கள் அதிருப்தி

வெள்ளக்கோவில் நகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT