தமிழ்நாடு

திருச்சி மலைக்கோட்டை குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் கட்டடத்தை அகற்ற உத்தரவு

திருச்சி மலைக்கோட்டை குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் கட்டடத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

DIN

திருச்சி மலைக்கோட்டை குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் கட்டடத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

குகைக் கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக் கோரி திருச்சியைச் சேர்ந்த சவுந்தராஜன் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். 

அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக  அறிவிக்கப்பட்டுள்ள பல்லவர் குகைக் கோயில் உள்ளது. இந்த குகைக் கோயிலையொட்டி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டிடத்தால் குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, குகைக் கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 'பல்லவர் குகைக் கோயில் அருகே உள்ள இடம், ரோஷன் என்பவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குடோன் கட்டியுள்ளார். அதனால் குகைக் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் நாட்டின் கலாசாரம், கலை, பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பல்லவர் குகைக் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர், திருச்சி மண்டல மத்திய தொல்லியல் அதிகாரி ஆகியோர் 4 வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

இந்த ஆய்வில் கட்டிடத்தால் குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியவந்தால் அதை சட்டப்படி அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT