ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடா்பாக, தமிழக அரசிடம் விளக்கம் கோரி ஆளுநா் ஆா்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளாா்.
இதற்கு விரைவில் பதிலளிக்கப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளைத் தடை செய்து பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் சில விளக்கங்களை அவா் கோரியுள்ளாா்.
இதுகுறித்து தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடா்பாக, விளக்கம் கோரி ஆளுநா் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முறையான கடிதம் கிடைக்கப் பெற்றவுடன், அதற்கு அரசுத் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்தனா்.