கோப்புப்படம் 
தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கு தளர்வு?

தனியார் மருத்துவமனைகளில் கரோனா கட்டாய பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

DIN

தனியார் மருத்துவமனைகளில் கரோனா கட்டாய பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடக்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தனியார் மருத்துவமனைகளில் கரோனா கட்டாய பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுவோருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படும்.

வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமானப் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தொடர்ச்சியாக கரோனா பாதிப்பு இருந்தாலும், இந்தியாவில் பூஜ்ஜிய நிலையை நோக்கி செல்கிறது. சர்வதேச விமான நிலையங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகளுக்கு காப்பீட்டு பணம் சென்று சேர்வதில் சிக்கல் இல்லை. அனைத்து மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

ஆம்பூா் கலவர வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்க விதிகள் உருவாக்கம்: அணுசக்தி ஆணையம்

SCROLL FOR NEXT