உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம்

மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணிவரை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

DIN

மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணிவரை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசால் உறுதியாக சொல்ல முடியுமா? 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், குறைவான நேரம் மது விற்றாலும் தமிழகமே மது விற்பனையில் முன்னிலையில் உள்ளது. மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணிவரை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை குறைவு!!

தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் அவ்வாறு பேசியுள்ளார்! - அன்பில் மகேஸ்

பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

SCROLL FOR NEXT