முகப்பு
தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:58 AM
பகிர்:

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை  நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு தடைகோரி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கின் விசாரணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறாது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு டிசம்பர் 6 ஆம் தேதி  விசாரிக்கப்படும் என்று  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி விசாரிக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஏற்றுகொண்டுள்ளது.


மேலும், டிசம்பர் 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு பன்னீர் செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.