தமிழ்நாடு

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி பலி

DIN

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமம் செய்யாறு சாலையில் வசித்து வருபவர் விவசாயி சரவணன்(50). இவரது மனைவி சாந்தி(45).

இவர்கள் இருவரும் சனிக்கிழமை காலை தங்கள் நிலத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து மின்கம்பத்தில் மின்சாரக் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.

அதனை கவனிக்காமல் அறுந்து கிடந்த மின்கம்பி மீது கால் வைத்துள்ளனர். அதில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT