தமிழ்நாடு

மைல்கல்லுக்கு படையலிட்டு பூஜை! கோவையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

DIN

கோவையில் தொலைவைக் காட்டும் மைல்கல்லுக்கு பொட்டு வைத்து பூஜை செய்து படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் பழைய மைல்கல் சேதம் அடைந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய மைல்கல் வைக்கப்பட்டு இருந்தது.

சிறுவாணிக்கு 20 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள மைல்கல்லுக்கும், முக்காளி என்ற இடத்திற்கு 45 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்ட கல்லுக்கும்  ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.

அந்த மைல்கற்களுக்கு இருபுறமும் வாழைக்கன்று வைத்து, மாவிலையால் தோரணம் கட்டி, மாலையிட்டு, பொட்டு வைத்து படையல் வைத்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.

இது மைல்கற்களை கொண்டாடுவதாக அல்லாமல், தங்கள் ஊரை நேசிக்கும் மக்கள், அதன் பெயருக்கு செய்யும் கொண்டாட்டம் என்று கோவை மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT