தமிழ்நாடு

6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: வட மண்டல ஐஜி கண்ணன்

DIN

தமிழக காவல்துறையில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் வட மண்டல ஐஜியாக என்.கண்ணன் நியமிக்கப்பட்டாா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

பி.சி.தேன்மொழி-சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஐஜி (தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி)

என்.கண்ணன்-தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி (சென்னை ஆயுதப்படை ஐஜி)

ஏ.பிரதீப்-செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை துணை ஆணையா்)

தீபக் ஸிவாச்-சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை துணை ஆணையா் (ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஐந்தாவது அணி கமாண்டன்ட்)

சமய் சிங் மீனா-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப்பிரிவு கிழக்கு துணை ஆணையா் (உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 10-ஆவது அணி கமாண்டன்ட்)

டி.குமாா்-ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஐந்தாவது அணி கமாண்டன்ட் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT