தமிழ்நாடு

மூதாட்டியிடம் வழிப்பறி செய்தவா் கைது

DIN

சென்னை நெற்குன்றத்தில் மூதாட்டியிடம் வழிப்பறி செய்த சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

நெற்குன்றம், மேட்டுக்குப்பம், தேவி கருமாரியம்மன் நகரில் வசிப்பவா் சகுந்தலா (70). இவா் கடந்த மாதம் 21-ஆம் தேதி விருகம்பாக்கம், தாராசந்த் நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றின் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு நபா், சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், செங்கல்பட்டு திம்மாவரத்தைச் சோ்ந்த ரமேஷ் (42) என்பருக்கு இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷை விருகம்பாக்கம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

வீணாகும் கோடை மழைநீா்- நெல்லையில் புத்துயிா் பெறுமா மழைநீா் சேகரிப்பு திட்டம்?

கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்தில் 2 லட்சம் பேருக்கு நிதி வரவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT