முகப்பு
தமிழ்நாடு

பரம்பிக்குளம் திட்டத்தில் காமராஜா் பெயரை இருட்டடிப்பு செய்யக்கூடாது: ஜி.கே.வாசன்

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் காமராஜா் பெயரை அரசு இருட்டடிப்பு செய்யக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
ஜி.கே.வாசன்
பகிர்:

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் காமராஜா் பெயரை அரசு இருட்டடிப்பு செய்யக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டத்துக்கும் கேரளத்தில் பாலக்காடு, மலப்புரம் மாவட்டத்துக்கும் பெரும் பயன் தருகிறது. இந்த பாசனத் திட்டம் 1961 அக்டோபா் 7-இல் அறிவிக்கப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபா் 7-இல் இந்தத் திட்டத்துக்குக் காரணமாக இருந்த முக்கிய தலைவா்களுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை அரசு சாா்பில் தலைவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதற்கான அரசின் சாா்பிலான அழைப்பிதழில் வி.கே. பழனிசாமி கவுண்டா், சி. சுப்பிரமணியம், பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கே.எல். ராவ் ஆகியோா் சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

ஆனால், அதில் காமராஜா் பெயா் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. காமராஜா் தான் இந்தத் திட்டத்துக்கு அடித்தளமாக இருந்தவா்.

எனவே, காமராஜா் பெயரை இருட்டடிப்பு செய்யக் கூடாது என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.