தமிழ்நாடு

மமக ஆா்ப்பாட்டம் : கே.பாலகிருஷ்ணன் திருமாவளவன் பங்கேற்பு

DIN

ஆளுநரைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதாகவும், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி இடையூறு அளிப்பதாகவும், அவற்றைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று மனித நேய மக்கள் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டிருந்தனா். மத்திய அரசையும், ஆளுநரின் செயல்பாட்டையும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT