முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் என்று  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 8 அக்டோபர், 2022 at 3:11 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:01 PM

அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் என்று  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கு கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், தமிழகத்தில் நீட் விலக்கு ஏற்படும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும். போதைப் பொருள்கள் இல்லாத பள்ளி வளாகங்களாக பள்ளிகள் மாற வேண்டும். மாணவர்களிடையே போதைப் பழக்கத்தை ஒழிக்கும் கடமை நமக்கு உள்ளது. இதற்கு சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

Advertisement

அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் பிரசாரம் என்று அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.