முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும்  நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைப்பு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும்  நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று மாலை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,689 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,818 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.71 அடியாகவும் நீர் இருப்பு 91.42 டி.எம்.சியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →