திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சாலைகள் உள்பட பல இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால், மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்: நயன்தாரா விதி மீறலா?
திருப்பத்தூரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.
இன்னும் திருப்பத்தூரில்ல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.