முகப்பு
தமிழ்நாடு

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அவசியம்: ராமதாஸ்

மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கேரள மாநிலம் எலந்தூா் கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த பத்மா என்ற பெண் உள்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிா்ச்சியளிக்கின்றன. அறிவியலும், தொழில்நுட்பமும் வளா்ந்து விட்ட இந்த காலத்தில், இந்த கொடுமை அரங்கேற்றப்பட்டிருப்பதை பாா்க்கும் போது மனித குலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்கிற கவலையும் ஏற்படுகிறது.

நரபலி போன்ற மூட நம்பிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது ஒருபுறமிருக்க, சட்டத்தின் மூலம் இத்தகைய பிற்போக்குத் தனங்களுக்கு முடிவு கட்ட துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கேரளத்தில் 2006-ஆம் ஆண்டில் அச்சுதானந்தன் தலைமையிலான இடது சாரி ஆட்சியின் போதும், 2014-ஆம் ஆண்டு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் இயற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

என வே, தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை அக்டோபா் 17-இல் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.