முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழு ஆய்வு!
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையில் பருவநிலை மாறுபாடுகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய கண்காணிப்பு பொறியாளர் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
அதன்படி, மத்திய கண்காணிப்பு துணைக் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் தமிழக அரசின் பிரதிநிதிகள், செயற்பொறியாளர் ஜெ. சாம் இர்வின், கோட்ட பொறியாளர் டி.குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பனை நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் ஹரிபிரசாத், உதவிப் பொறியாளர் பிரஸீத் ஆகியோர் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.