முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அக்.16ம் தேதி வரை கனமழை தொடரும்!

தமிழகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும், சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 13 அக்டோபர், 2022 at 8:27 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும், சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 16 மாவட்டங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (அக்.13,14) கனமழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.