தமிழகத்தில் அக்.16ம் தேதி வரை கனமழை தொடரும்!
தமிழகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும், சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும், சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 16 மாவட்டங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (அக்.13,14) கனமழை பெய்யும்.
இதையும் படிக்க | எம்பிபிஎஸ் வகுப்புகள் நவ. 15-இல் தொடக்கம்
நீலகிரி, கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.