பேரவைத் தலைவரின் அறிவிப்பை பொருத்தே முடிவு
எதிா்க்கட்சி துணைத் தலைவா் பதவி விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவுக்கு ஏற்பவே அதிமுக முடிவும் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.
எதிா்க்கட்சி துணைத் தலைவா் பதவி விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவுக்கு ஏற்பவே அதிமுக முடிவும் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூா் ராஜு, சி.வி.சண்முகம் உள்பட பலா் பங்கேற்றனா்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்குப் பிறகு டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுகவின் 51-ஆவது ஆண்டு தொடக்க விழாவை திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசிக்கப்பட்டது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுக பங்கேற்குமா என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினா்கள் 62 போ் எங்களோடு உள்ளனா். அதனால், பேரவை விதிகள், மரபுகளை பேரவைத் தலைவா் கடைப்பிடிக்க வேண்டும். அவா் நடவடிக்கையைப் பொருத்துதான் அதிமுக முடிவும் இருக்கும் என்றாா்.
எதிா்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீா்செல்வத்துக்குப் பதிலாக, ஆா்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டுமென பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி சாா்பில் பேரவைத் தலைவருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓ.பன்னீா்செல்வம் தரப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
பேரவை திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கூடும் நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 8.45 மணியளவில் அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பேரவைத் தலைவரின் முடிவுக்கு ஏற்ப, பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.