முகப்பு
தமிழ்நாடு

'ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை தா தலைவா'; கதறி அழும் தொண்டர்

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்க ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை கொடுத்து அவங்கள கண்டீங்க தலைவா என்று கதறி அழும் தொண்டர் ஒருவரின் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Updated On : 17 அக்டோபர் 2022, 2:43 pm IST
பகிர்:

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்க ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை கொடுத்து அவங்கள கண்டீங்க தலைவா என்று கதறி அழும் தொண்டர் ஒருவரின் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்த தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அவர் வணங்கிய படி, "இந்தக் கட்சியை ஒன்றாக்கி ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை கொடுங்க தலைவா இனிவரும் காலங்களில் தேர்தலில் உங்கள் எண்ணம், அம்மாவின் எண்ணம் நிறைவேற இயக்கம் அழியாமல் இருக்க இருவருக்கும் நல்ல புத்தியை கொடுத்து கட்சியை காப்பாற்ற சொல்லுங்க தலைவா" என்று தொண்டர் ஒருவர் கதறி அழுதக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.