தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை!

DIN

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுருளி அருவி சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் வரத்து இருக்கும்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சுருளி அருவியின்  நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப் பாறை உள்ளிட்ட நீரோடைகளில் இரவு விடிய விடிய மழை பெய்தது. அதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைக் கண்காணித்த கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்கத் தடை விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT