தமிழ்நாடு

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

இதனைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி அரசு உதவி பெறும் வ.உ.சி. கல்லூரியில் மாணவர் - மாணவிகள் இன்று வகுப்பைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலர் கார்த்திக் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில்,  மத்திய அரசுக்கு எதிராகவும், ஹந்தி மொழி திணிப்பைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT