தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

DIN

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை தாக்கல் செய்தார். 

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து ஏற்கெனவே அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்பதால் சட்டப்பேரவையில் மசோசா தாக்கல் செய்ய வேண்டும்.

இந்நிலையில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறை அல்லது ரூ.5000 அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும் என்றும், சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT