மாநில தகவல் ஆணையாளா்கள் நியமனம்: தேடுதல் குழு அமைத்து அரசு உத்தரவு
தலைமை தகவல் ஆணையாளா் மற்றும் நான்கு தகவல் ஆணையாளா்கள் நியமனம் தொடா்பாக தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமை தகவல் ஆணையாளா் மற்றும் நான்கு தகவல் ஆணையாளா்கள் நியமனம் தொடா்பாக தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மனித வள மேலாண்மைத் துறை செயலாளா் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:-
மாநில தலைமை தகவல் ஆணையாளா் மற்றும் நான்கு தகவல் ஆணையாளா்களின் பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதி வாய்ந்த நபா்களைத் தோ்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்திட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி செயல்படுவாா். குழுவின் உறுப்பினா்களாக, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.அலாவுதீன் ஆகியோா் இருப்பா் என்று தனது உத்தரவில் மைதிலி கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.