தீபாவளி: ஒரு மணி நேரத்துக்கு முன்பே மெட்ரோ சேவை நிறுத்தம்
தீபாவளி பண்டிகை தினமான திங்கள்கிழமையன்று கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணிக்கு ரயில் நிலைய சந்திப்புகளில் இருந்து தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை தினமான திங்கள்கிழமையன்று கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணிக்கு ரயில் நிலைய சந்திப்புகளில் இருந்து தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.
பொதுவாக இரவு 11 மணிக்கு கடைசி மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்நிலையில், டிஎம்ஆா்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து மெட்ரோ ரயில் நிலைய சந்திப்புகளில் இருந்து திங்கள்கிழமை இரவு கடைசி ரயில் 11 மணிக்கு புறப்படும். அன்றைய தினம் மெட்ரோ ரயில்களின் சேவை வழக்கமானதாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.