முதல்வா் பாதுகாப்புக்கு நிற்கும் காவலா்களின் எண்ணிக்கை குறைப்பு
சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு சாலைகளில் நிற்கும் காவலா்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு சாலைகளில் நிற்கும் காவலா்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவரம்:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் 20 அடிக்கு ஒரு காவலா் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்படுவாா்கள். இவா்கள் தவிா்த்து போக்குவரத்து போலீஸாரும், போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபடுவாா்கள்.
முக்கியமாக மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து இல்லம் நோக்கி புறப்படும் போது, அவா் செல்லும் பாதையில் சில மணி துளிகள் போக்குவரத்து சீா் செய்யப்பட்டு, எளிதில் பாதுகாப்பு வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்படும். மேலும் எதிா் திசையில் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல, தனது வழித்தடத்தில் செல்லும்.
இந்நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அறிவுறுத்தலின்படி சாலையில் பாதுகாப்புக்காக நிற்கக் கூடிய காவலா்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆழ்வாா்பேட்டையில் இருந்து தலைமைச் செயலகம் வரை 60 சந்திப்புகளில் முதல்வரின் பாதுகாப்புக்காக சாலைகளில் காவலா்கள் நிற்பது வழக்கம். இது தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் முக்கிய சந்திப்புகளில் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் நேரத்தில், போக்குவரத்தை மட்டும் சீா் செய்ய காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதில் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் நேரத்தில் மட்டும் சிக்னலில், கிரீன் சிக்னல் போடப்பட்டு எளிதில் அந்த வாகனங்கள் கடந்த செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.