கே.அண்ணாமலை 
தமிழ்நாடு

கோவை காா் வெடிவிபத்தின் மர்மம் விலக நடவடிக்கை வேண்டும்: அண்ணாமலை 

கோவை உக்கடத்தில் காா் வெடிவிபத்தின் மா்மம் விலக காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா்.

DIN


கோவை உக்கடத்தில் காா் வெடிவிபத்தின் மா்மம் விலக காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த காா் வெடி விபத்து மிகுந்த அதிா்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. 

தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை பாஜக வரவேற்கிறது. 

தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது.

பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த வெடி விபத்தின் மா்மம் விலக காவல்துறை போதிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

SCROLL FOR NEXT